Monday, 19 September 2011

கோபம்

கவிதை கூட கோபம் வரும் என்று
என்னவள் கோபப்படும் போது தான்
அறிந்து கொண்டேன்!!!!

அதிகமாக நினைக்கிறேன்

என்னை மறந்த அவளை
நானும் மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை என்ன ஆச்சரியம்
அவளை மறக்க நினைக்கையில் தான்
அவளை அதிகமாக நினைக்கிறேன்!!!

Thursday, 15 September 2011

அழகாய் இருக்கிறது

என் பெயரை மற்றவர்கள்
அழைப்பதை காட்டிலும்
அழகாய் இருக்கிறது
உன் உதடுகளினால்
உச்சரிக்கப்படும் போது...

Monday, 12 September 2011

காதலித்து பார்

கத்தியுமின்றி இரத்தமின்றி
யுத்தம் செய்ய வேண்டுமா
காதலித்து பார் !!!!!!!!!!

சுமை

புத்தகங்கள் கூட
எனக்கு சுமையாக தெரிந்தது
நீ புத்தகங்களை ஏந்தி வருகையில்!!!!!!!!!!!!!!!!

யாரடி நீ

கவிதைகள் எழுதும் போது வரிகளாய் வருகிறாள்
கற்பனை செய்யும் போது உருவமாய் வருகிறாள்
பாதையில் நடந்தாலும் நிழலாய் தொடர்கிறாள்
இருட்டினில் மறைந்தாலும் நினைவுகளாக தொடர்கிறாள்
யாரடி நீ தயவு செய்து உன் முக முகவரியை
காட்டிவிடு இல்லையோல் என் கற்பனைகள்
ஒன்று சேர்ந்து என்னை முழுநேர
கற்பனை கவிஞனாகவே மாற்றிவிடும் போலும்!!!!!!!!!!!!!!!!!

Saturday, 10 September 2011

புரியவில்லையா

வாழ்கைக்கும் மரணத்திற்கும்
அதிக தூரம் என்றாய்
ஏனடி புரியவில்லையா உனக்கு
நீ என்னை விட்டு
பிரியும் போது எல்லாம்
நான் மரணிக்கிறேன் என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!

Friday, 9 September 2011

அறியாமலே

புன்னகை என்னும் முகமூடியை
தூரத்தில் வரும்போதே போட்டுக்கொண்டு
நீ தேரென வீதியில் வரும்போது
என்ன ஆச்சரியம்
என்னை அறியாமலே
என் உதடுகள் புன்னகைக்கிறது
உனை பார்த்து…..
அப்போதே புரிந்து கொண்டேன்
எல்லாம் காதல் செய்யும் மாயம்!!!!!!!!!!!

Thursday, 8 September 2011

ஆச்சரியம்

அவளால் உச்சரிக்க பட்ட
என் கவிதைகள் அணைத்தும் - ஏனோ
என்னை பார்த்து ஏளனம் செய்கிறது
காரணம் கேட்டேன்
அவளின் விழிகள் அவைகளை
பார்த்து மௌனமாக சிரித்தனவாம்
என்ன ஆச்சரியம் என்னை
பார்க்காமல் தவிர்க்கும் அவள் கண்கள்
என் கவிதைகளை பார்த்து சிரித்தனவாம்
உண்மையாகவே ஆச்சரியம் தான் !!!!!!!!!!!!!!!!!

Wednesday, 7 September 2011

வரம்

என்னை பொருத்த வரை
காதல் என்பது
கடவுளின் வரம்
கிடைத்தவர்கள் அனுபவிக்க
கிடைக்காதவர்கள் ஏங்க!!!!!!!!!!!!!

காதலை எழுதுகிறேன்

என் நண்பர்கள் என் கவிதைகளை
படித்து விட்டு என்னை கேட்கிறார்கள்
கவிதையாய் எழுதுகிறாய் என்று
அவர்களுக்கு புரியவிட்டால் பரவாயில்லை
ஏனடி
இன்னும் உனக்கு கூட புரியவில்லையா 
நான் கவிதைகளை எழுதவில்லை
என் காதலை எழுதுகிறேன் என்று!!!!!!!!!!!!!!!!!

Tuesday, 6 September 2011

கொழுசு

கம்பன் வீட்டு கட்டுத்தரியும்
கவிபாடுமாம் நான் கேட்டதில்லை - ஆனால்
என்னவளின் கொழுசு கூட கவிபாடுகிறதே
அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு
அடிக்கும் காவியமே பாடுகிறது!!!!!!!!!

Sunday, 4 September 2011

யார் அறிவார்

அவள் வீட்டில் கோலம் போடும் போது மட்டும்
ஏனோ வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது
எனக்கோ சந்தேகம் அவள் போடும் புள்ளி
கோலத்தை பார்த்து ஒருவேளை நாணி குறுகி
மேகம் என்னும் முந்தாணையாள் முகத்தை
மூடி கொள்ளுகிறது போலும் வானம்
ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம்
யார் அறிவார் இப்பூவுலகில்!!!!!!!!!!

Saturday, 3 September 2011

ஏங்கி கிடக்கிறது

நெஞ்சினில் ஓராயிரம் எண்ணங்கள் உண்டு
அவளை பற்றி கூற என்ன செய்வேன்
இன்னும் அவள் என்னிடம் கூறவில்லை
காதலை ஏங்கி கிடக்கிறது மனசு
எப்போது கூறுவாள் என்று தினம் தினம்
தாய் வரவிற்கு காத்திருக்கும் குழந்தை போல்
பொறுத்திருந்து பார்க்கிறேன் என்று வரும்
அந்த தினமென்று!!!!!!!!!!!!!!

Thursday, 1 September 2011

பயம்

இன்று என்னவளை பிள்ளையார்
கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்றேன்
அவளோ என்னிடம் ஏன் என்றால்
எனக்கோ எப்படி சொல்வதென்று
தெரியவில்லை இருந்தாலும் சிரித்து கொண்டே
சொன்னேன் எங்கே நீ பிள்ளையாரை
சுற்றப்போய் உன்னை பார்த்த பிறகு
பிள்ளையார் உன்னை சுற்றுவாரோ என்ற
பயம் என்றேன் அவளோ சிரித்து கொண்டே
சென்றாள் கோவிலின் எதிர் திசையில்!!!!!!!!!!!!!!

Wednesday, 31 August 2011

காதல் செய்யும் மாயம்

உன்னோடு நடை பழகிய பிறகு
நான் தனியே நடக்கும் போது
என்ன அதிசயம்
எந்தன் நிழல் கூட எனக்கு பாரமாய் தெரிகிறது
எல்லாம் காதல் செய்யும் மாயம்!!!!!!!!!!

காதலித்து பார்

காதலின் நினைவுகளுடன் நீ வீதியினில்
தனியே நடக்கும் போது வானம் தூவும்
மழைத்துளிகள்  நம் மீது விழும் போது கூட
மலர்கள் நம்மீது விழுவதாய் தான் தோன்றும்
காதலித்து பார்!!!!!!!!!!!!!!

கவலை படாதே

என்னவளே
நான் உன்னுடன் இல்லையென்று
கவலை படாதே நான் உன்னோடும்
உந்தன் உயிரோடும் கலந்து
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன் 
வேண்டுமானால் உன் இதயதுடிப்பை
உற்று கேட்டுப்பார் என்ன சொல்லி துடிக்கிறதென்று
லப்டப் என்றா இல்லை என் கதலை சொல்லியா ?

Tuesday, 30 August 2011

அடம்பிடிக்கிறது

என்ன ஆச்சரியம்
காதலை எழுதும் போது மட்டும்
என் பேனா ஆனந்தமாய் கண்ணீர்விடுகிறது -ஆனால்
மற்றவைகளை பற்றி எழுதும் போது
ஏனோ கஷ்ட படுகிறது போலும்
எழுதாமல் அடம்பிடிக்கிறது
ஒரு வேளை என் பேனாவும்
உன்னை காதலி்க்க ஆரம்பித்து விட்டதோ !!!!!!!!!!!

Monday, 29 August 2011

உறுத்துகிறது

முள்ளின் மேல் கைகள் பட்டும் வலிக்கவில்லை
கால்கள் இரண்டும் கல்லில் பட்டும் வலிக்கவில்லை
கண்கள் இரண்டில் துசி விழுந்தும் உறுத்தவில்லை
ஆனால் வலிக்கிறது உறுத்துகிறது
என்னவள் முத்தத்தை எனக்கு தராமல்
அவள் பக்கத்து வீட்டு குழந்தைக்கு
கொடுக்கும் போது மட்டும்!!!!!!!!!!!

Sunday, 28 August 2011

பயமாம்

என்னவள் என்னிடம் சொன்னாள்
 நான் கவிதை எழுதுவதை தவிர்க்க சொன்னாள்
ஏன் என்றேன்
அவளோ சிரித்து கொண்டே இப்போதெல்லாம்
என்னை விரும்புவதை காட்டிலும்
என் கவிதைகளை அதிகம் விரும்புகிறாளாம் 
எங்கே என்னை மறந்து
என் கவிதைகளைமட்டுமே காதலிக்க 
ஆரம்பித்து விடுவோமா என்ற பயமாம்!!!!!!!!!!!

Saturday, 27 August 2011

பஞ்சு மிட்டாய்

என்ன ஆச்சரியம்
காதல் ஒரு சுகமான உணர்வு
உன்னை காதலித்த பிறகு 
தினம் தினம் என் வீட்டு வழியே
விற்று செல்லும் பஞ்சு மிட்டாயை
பார்த்தால் கூட
அவள் முகம் தான் ஞாபகம் வருகிறது

Wednesday, 24 August 2011

விடுதலை

இன்று என் கற்பனைகளுக்கு
விடுமுறை வேண்டுமாம் கெஞ்சுகிறது
என்னிடம் எதற்கு என்றேன்
அவைகளும் ஒருநாளாவது என்னவளிடம்
என்னிடம் படும் அவஸ்த்தையை சொல்லி
தயவு செய்து என்னை காதலிக்க
சொல்லி முறையிடவாம்
பாவம் அவைகளுக்கு தெரியவில்லை போலும்
நீ என்னை காதலித்தால் மட்டும்
விடுதலை கிடைத்து விடுமா என்னிடமிருந்து!!!!!!!!!!!!!!!

அவள்

அவள்
என் வாழ்வில்
நேற்றைய கனவு
இன்றைய நிழல்
நாளைய நிஜம்!!!!!!!!!!!!!!!

பார்க்க தேவையில்லை

நான் இதுவரை தேவதைகளை பற்றி
பிறர் சொல்ல கேட்டிருக்கிறேன்
ஆனால் பார்த்ததில்லை
இனியும் பார்க்க தேவையில்லை
என்னவளை பார்த்த பிறகு!!!!!!!!

Tuesday, 23 August 2011

புரிகிறதென்று

இரவு பகல் பாராமல்
கவிதையை இல்லை இல்லை
காதலை எழுதுகிறேன்
பொருத்திருந்து பார்க்கிறேன்
எப்போது தான்
என் காதல்
அவளுக்கு புரிகிறதென்று !!!!!!!!!!!!

விசித்திரமானது

நான் ஜாதி மாற்றியும்
காதலிக்கவில்லை
நான் மதத்தை மாற்றியும்
காதலிக்கவில்லை இருந்தாலும்
என் காதலை மறுக்கிறாள் 
காதலர்களே பாருங்கள்
காதல் எவ்வளவு விசித்திரமானது என்று !!!!!!!!!!!!

Monday, 22 August 2011

உண்மையாகவா

நான்
என் காதலியிடம்
அதிகம் பேசுவதில்லையாம் 
உண்மையாகவா என்றேன்
அவளோ சிரித்து கொண்டே
 உன்னை விட  என் கவிதை
அதிகம் பேசுகிறதாம்
அவள் மீது
நான் கொண்ட காதலை!!!!!!!!!!!!

பைத்தியம்

என் காதலை சொன்னால்
என்னை பைத்தியகாரன் என்கிறாள்
எப்படி அவளுக்கு புரியவைப்பேன்
என் பைத்தியம் அவள் மீதென்று.....

இரசிக்கிறது.

என்னவள்
என் கவிதைகளை
 இரசிக்கிள்
என்ன ஆச்சரியம் இங்கு
ஒரு கவிதை
இன்னொரு கவிதையை  இரசிக்கிறது!!!!!!!!!

Saturday, 20 August 2011

தோல்வி

இன்றும்
அவள் அழகோடு
போட்டிபோட்டு தோற்று போனது
என் எதிர் வீட்டு ரோஜா
பாவம் அவள் கடந்து சென்றதும்
தன் இதழ்களை உதிர்த்து
தோல்வியை ஒப்பு கொண்டது....

Sunday, 14 August 2011

குறை

என்னவள் என்னிடம் வந்து
குறை கூறுகிறாள்
அவள் வீட்டு கண்ணாடி
அவளை சரியாக பிரதிபளிக்கவில்லையாம்
ஒருவேளை அவள் வீட்டு
கண்ணாடி கூட அவளை பார்த்து
வெட்கப்படுகிறது போலும்!!!!!!!!!!!

Sunday, 7 August 2011

உதட்டு சாயம்

உன்னை யாரடி
உதட்டு சாயத்தையெல்லாம் வானிற்கு
கடனாய் கொடுக்க சொன்னது
மாலை நேரத்தில் வானத்தை பார்
உலகமே வியக்கும் அளவிற்கு
பூசிக்கொண்டு என்னை பார்த்து
ஏளனம் செய்கிறது
தினம் தினம் !!!!!!!!!!!!!!!

Saturday, 30 July 2011

எனக்கு பிடித்த கவிதை

எனக்கு
பிடித்த கவிதை
என்னவளின் பெயர்!!!!!!!!!!

Thursday, 28 July 2011

புரக்கணிக்கிறதாம்

அன்பே
உன்னை சேலைகட்டி யார்
வீதி உலா வரசொன்னது
உன்னை பார்த்த பிறகு - பாவம்
நிலவினை கூட வானம்
புரக்கணிக்கிறதாம் மாதத்தில்
மூன்று நாட்கள் அம்மாவாசையாய்!!!!!!!!!!!!!!

Wednesday, 27 July 2011

மின்தட்டுப்பாடு

அன்பே தமிழகத்தில் மின்தட்டுப்பாடாம்
அண்டை மாநிலங்களிடம்
கடனாய் கேட்கிறார்களாம்
 தட்டுப்பாட்டை குறைக்க
பாவம் அவர்களுக்கு
தெரியவில்லை போலும்
உன் பார்வையில் உள்ள
மின்சாரத்தை பற்றி!!!!!!!!!!!!!!

முறைகேடாம்

அய்யகோ
அலைவரிசை ஒதுக்கியதில் முறைகேடாம்
என்னவளே நீ கைபேசி-வழியே
எனக்கு தந்த முத்தங்களை
கணக்கெடுத்து சொல்
குறைகிறதா என்று பார்க்கிறேன்
குறைந்தால் நானும் நீதி
மன்றத்தில் வழக்கினை தொடுப்பேன்
 நீ தந்த முத்தங்கள் முழுமையாக
எனக்கு வந்து சேரவில்லை என்று!!!!!!!!!!!!!!!!

Tuesday, 26 July 2011

மோட்சமாவது அடைந்திருப்பேன்

கவிதைகள் மட்டுமே
உனக்கு பிடிக்கும் என்று
முன்னரே தெரிந்திருந்தால்
இத்தனை காலம்
காத்திருந்திருக்க மாட்டேன்
எப்படியேனும்
ஒரு கவிஞனின் கற்பனையில் புகுந்து
அவனது பேனா மையில் பிறந்து
உன் ரசனையில் சில நிமிடமேனும்  வாழ்ந்து 
குப்பை தொட்டியில் மோட்சமாவது அடைந்திருப்பேன்
கசங்கிய காகிதமாக!!!!!!!!!!!!!!!!

என்ன நீதி

என்ன நீதி
எதிர்வீட்டு குழந்தை
தவறு செய்தால் மட்டும்
முத்தம் தந்து திருத்துகிறாள்
ஆனால் நான்  மட்டும்
தவறு செய்தால்
விழிகளால் பேசி மிரட்டுகிறாள்!!!!!!!!!!!!!!!!

Sunday, 24 July 2011

போட்டி

முகில்களே தயவு செய்து
என்னவள் வருமுன்
கலைந்து போய்விடுங்கள்-இல்லை
என்னவள் கார்குழலுடன்
போட்டி போட்டு தோற்றபின் தான்
கலைவேன் என்றால் சரி
பொருத்திருங்கள் ஒரு வேளை
போட்டியில் தோற்றபின்
தயவு செய்து தற்கொலை
செய்து கொள்ளாதீர்கள்
பாவம் உங்களை நம்பி-இவ்வுளகில்
பல உயிர்கள் உண்டு!!!!!!!!!!!!!

பூமுடிக்கிறளாம்

என்னவள் பூமுடிக்கிறளாம்
என்ன ஆச்சரியம்
ஒரு பூ இன்னொரு
பூவை முடிகிறதாம்!!!!!!!!!!!!

Saturday, 23 July 2011

வளர்பிறை நிலவாய்

நீ கடித்து துப்பிய
நகத்தினை எப்பொழுது எனக்கு
தெரியாமல் வானிற்கு
கடனாக தந்தாய் இப்படி
உலகறிய  இன்று வானில்
கம்பிரமாய் உலா வருகிறது
வளர்பிறை நிலவாய்!!!!!!!!!!!!

Friday, 22 July 2011

வீணை

உன் விழிகளுக்கு
எப்போது வீணை
மீட்க கற்று கொடுத்தாய்
இப்படி விடாமல் மீட்டுகிறது
என் இதயத்தை
லப்டப் என்று!!!!!!!!!!!

தயிர் சாதம்

அன்று  நீ எனக்காக
அறுச்சுவை உணவினை
படைப்பாய் என்று எதிர்பார்தேன்.....
சாப்பிட்டு முடித்த பிறகு
எப்படி இருந்த என்றாய்
நானும் சிரித்து கொண்டே
அமிர்தம் என்றேன் ஆனால்
அன்று நீ படைத்து
என்னவோ தயிர் சாதம் தான்!!!!!!!!!!!!!

Thursday, 21 July 2011

அழுகிறது வானம்

அன்பே
உன்னை காணாததால் என்னவோ
கடந்த இரண்டு நாட்களாக -இப்படி
விடாமல் அழுகிறது வானம்
மழையாய்!!!!!!!

புன்னகை

உன் இதழ்கள் செய்யும்
மகரந்த சேர்க்கை
புன்னகை!!!!!!!!!!!

Wednesday, 20 July 2011

இதழ்கள் பத்திரம்

என்னவளே உன் இதழ்கள் பத்திரம்
உன் குரலின் இனிமையை
எங்கிருந்தோ ஒட்டு கேட்ட
வண்டுக்கள் என்னை நச்சரிக்கிறது
உன் முகவரியை கேட்டு
அவைகளும் உன் இதழ்களில்
தேனை குடிக்க வேண்டுமாம் !!!!!!!!!!!!

சிணுங்கள்

ஏழு சுரங்களில்
தேடி பார்த்தேன்
இதுவரை என்னால்
கண்டுபிடிக்க முடியவில்லை
உங்களால் முடிந்தால்
கண்டுபிடித்து கூறுங்கள்
என்னவளின் சிணுங்கள்
எந்த சுரத்தை
சார்தது என்று!!!!!!!!!!!!!!!!

Monday, 18 July 2011

எனக்கோ இன்னும் விளங்கவில்லை

அன்று
சற்று அமைதியாய்
நான் உன்னிடம்
என்ன பிடிக்கும் என்றேன்
நீயோ சற்றும் யோசிக்காமல்
பூக்கள் என்றாய்
எனக்கோ இன்னும் விளங்கவில்லை
எப்படி
ஒரு பூவிற்கு இன்னொரு
பூ பிடிக்கும் என்று!!!!!!!!!!!!!!

Sunday, 17 July 2011

பருக்களாக

என்ன ஆச்சரியம்
பகலினில் கூட
நட்சத்திரம் ஜொலிக்கிறதே
என்னவளின் முகத்தில்
பருக்களாக!!!!!!!!!!!!!!

Saturday, 16 July 2011

என்ன ஆச்சரியம்

என்ன ஆச்சரியம்
வைரசும் என்னவளை
காதலிக்கிறது போலும்
கடந்த ஒரு வாரமாக
என்னவளுக்கு வைரஸ் காய்சலாம் !!!!!!!!!!!!!

Friday, 15 July 2011

உனக்கு புரியவில்லையா

சகியே
என் எழுத்துக்கள்
ஒவ்வொன்றையும் கவிதை என்றாய்
ஏன் உனக்கு புரியவில்லையா
அந்த எழுத்துக்களின் பொருள்
நீ என்று!!!!!!!!!!!!

Thursday, 14 July 2011

அவளை பிடிக்குமா

அவள் கூந்தலில் சூடியிருந்த
மலரிடம் கேட்டேன்
அவளை பிடிக்குமா என்று
மௌனமாக சிரித்தது தன்
இதழ்களை விரித்து
அவள் காலில் அணிந்திருந்த
கொலுசிடம் கேட்டேன்
அவளை பிடிக்குமா என்று
மௌனமாக சிரித்தது தன்
மணிகளை உரசி
இரண்டும் என்னிடம் கேட்டது
உன்னை  எனக்குபிடிக்கும் - என்று
நானும்  மௌனமாக சிரித்தேன்
அட
காதலில் மௌனமான சிரிப்பதற்கு
அர்த்தம் ஆம் என்பதாமே!!!!!!!!!!!!!!!!

Tuesday, 12 July 2011

வெட்கம்

என்னவள் வெட்கபடும் போதெல்லாம்
தோற்று போகிறதாம்- அவள்
கூந்தலில் இருந்த ரோஜா 
பாவம் அவளின் கண்ணத்தின்
சிவப்பிற்கு ஈடுகொடுக்க முடியவில்லையாம்!!!!!!!!!!!

Monday, 11 July 2011

ஏளனம்

அதுவரை பூக்காத என் வீட்டு
பூக்கள் எல்லாம்
அவள் என் வீட்டிற்கு வந்து சென்ற
நாட்கள் முதல் அவளுக்காக
தினம் தினம் பூத்து கொண்டே உள்ளது
எனக்கோ காரணம் புரியவில்லை
ஒருவேளை என்னவளின் ஸ்பரிசம்
தீண்டியதால் என்னவோ இப்படி
என்னை பார்த்து சிரிக்கிறது
ஏளனமாய் தினம் தினம்!!!!!!!!!

Sunday, 10 July 2011

வரம்

நான்
பூவாக பிறக்க
வரம் கிடைத்திருந்தால்
ஒரு பொழுதோனும்
உன் கூந்தலில்
வசித்து வாடும்
வரத்தினையும் சேர்த்து
கேட்டிருப்பேன் கடவுளிடம்!!!!!!!!!!!

விடியாத இரவொன்று வேண்டும்

என்
கனவில் வந்த
நினைவுகள் யாவும்
நிஜங்களாய் மாறும் -வரை
விடியாத இரவொன்று வேண்டும்!!!!

முடிந்தால் கற்றுக்கொடு

உன் விழிகளுக்கு
யாரடி கவிதை
எழுத கற்றுக்கொடுத்தது
இப்படி ஒரே பார்வையில்
ஓராயிரம் கவிதை ஏழுதுகிறதே
முடிந்தால் என்
விழிகளுக்கும் கற்றுக்கொடு
எங்கே பார்க்கலாம்
உன் விழிகளோடு
போட்டி போட
முடியுமா என்று!!!!!!!!!

முதல்பார்வை

என்ன ஆச்சரியம்
உதடுகளால் மட்டுமே
பேசமுடியும் என்ற
என் எண்ணத்தை
உன் முதல்பார்வை
மாற்றிவிட்டது!!!!!!!!!!!!!

உன்னை கண்ட மறுநொடி

என்ன ஆச்சரியம்
அந்த நிமிடங்கள் வரை
லப்டப் என துடித்துக்கொண்டிருந்த
என் இதயம்
உன்னை கண்ட மறுநொடி
என்னை கேட்டாமலே
உந்தன் பெயரை சொல்லி
துடிக்க ஆரம்பித்துவிடுகிறது!!!!!!!!!!!!!!

வா சொல்லி பார்க்கலாம்

நான் நீ என்று சொன்னால்
உதடுகள் ஒட்டாதாம் எங்கே
வா சொல்லி பார்க்கலாம்
நம் இதழ்களை சேர்த்து!!!!!!!!

அலைகளும் ஏமாந்து போனது

நீ வருகிறாய் என்று
என்னை ஏமாற்றிய நாட்களில்
ஏமாந்து போனது
நான் மட்டும் அல்ல
இந்த கடற்கறையில் நீ
என்னோடு நடைபயிலும் நேரங்களில்
நமக்கு தெரியாமல்
உந்தன் பாதசுவடுகளை திருடி
செல்லும் அலைகளும் கூட!!!!!!!!!!!!!!

Friday, 8 July 2011

முடிந்தால் கற்றுக்கொடு

உன் விழிகளுக்கு
யாரடி கவிதை
எழுத கற்றுக்கொடுத்தது
இப்படி ஒரே  பார்வையில்
ஓராயிரம் கவிதை ஏழுதுகிறதே
முடிந்தால் என்
விழிகளுக்கும் கற்றுக்கொடு
எங்கே பார்க்கலாம்
உன் விழிகளோடு
போட்டி போட
முடியுமா என்று!!!!!!!!!

Sunday, 3 July 2011

அழுகிறது வானம் மழையாய்

அன்பே!
உன் சோகத்தை என்னிடம்
நேரடியாக சொல்லியிருக்கலாம்
ஏனடி தென்றலிடம் சொல்லி தூது சொன்னாய்.........
தென்றல் என்னிடம் சொல்லாமல்
ஒருவேளை வானத்திடம் சொல்லிவிட்டதா என்ன?
இப்படி விடாமல் அழுகிறது வானம் மழையாய் !!!!!!!!!!

சண்டை

அன்று பூக்கடையில் நின்று 
நீ பூக்காரியிடம் பூவின் விலைக்காக 
சண்டைபோட்டு கொண்டு இருந்தாய் 
நானோ அதனை பார்த்து வியந்து- நின்றேன்
என்ன ஆச்சரியம் 
அந்த பூக்கடையில் ஒரு பூ
மற்றெரு பூவிற்காக சண்டைபோடுகிறது!!!!!!!

எதிரி

தனிமை தான் எதிரி
என்றிருந்தேன் இப்போது
புரிந்தது அது
உன் நினைவுகள் என்று!!!!!!!!!

மருந்து

நீ வருவாய் என காத்திருந்து
ஏமாந்து போன இதயத்திற்கு
மருந்தாகிறது உன்னோடு வாழ்ந்த
என் இறந்தகால நினைவுகள்....

ஆறுதல்

தூக்கத்தை மறந்து
துக்கத்தில் அழும்போது
ஆறுதலாய்
என் விழிகளில்
உன் நினைவுகள்.......

அதிசயம்

பூத்து குழுங்கும் பூக்களையும்
ஆற்றில் குதித்தாடும் மீன்களையும்
சுதந்திரமாய் சுற்றிதிரியும் மேகங்களையும்
சேற்றினில் மலரும் செந்தாமரையையும்
அறிவியலை மிஞ்சும் இயற்கையையும்
உன்னோடு ஒப்பிட்டு பார்த்தால்
பெண்ணே
நீயும் ஓர் அதிசயம் தான்!!!!!!!!!!

நியாயமா

என்ன விந்தை நீ
காலையில் கடந்து செல்லும்
பாதையில் உள்ள பூக்கள் எல்லாம்
உன்னை பார்த்ததும் சிரிக்கிறது ஆனால்
என்னை பார்த்தால் மட்டும்
இப்படி முறைக்கிறது மாலையில் !!!!!!!!!!!!

என் பேச்சு

உன்னோடு பேசும்
ஒவ்வொரு வார்த்தையையும்
கவிதை என்றாய்
ஏன்
உனக்கு புரியவில்லையா
என்னை பேச வைப்பது
நீ என்று!!!!!!!!!!!!!!!!!

Saturday, 2 July 2011

காதலி

இதயம் என்னும் தேன்கூட்டை
விழிகளில் நாணேற்றி
காதல் என்னும் அம்பெய்தி
கலைத்துவிட்டவள்!!!!!!

Friday, 1 July 2011

முன்னெச்சரிக்கை

என்னவளே ஜாக்கிரதை
ஏதோ  ஊரில்
சிலையை காணவில்லையாம்
எனக்குள் ஓர் பயம் - எல்லோரும்
எங்கே உன்னை தேடி
வந்து விடுவார்களா என்று!!!!!!!!!!!!!!!!!

அம்மாவாசை

இன்று அம்மாவாசையாம் அதனால்
நிலவு தெரியாதாம் - மூடர்களுக்கு
எப்படி புரிய வைப்பேன் - நிலவு
என்னருகில் அமர்ந்து  என்னோடு
காதல் புரிகிறது என்று!!!!!!!!!

Thursday, 30 June 2011

அறிவிப்பு

ஒற்றை சொல்லாவது சொல்லடி
என்னை காதலிக்கவில்லை என்று
அப்படியாவது காதல் என்ற சொர்க்கம்
உன் உதடுகளின் வழியே பிறந்ததாக
இவ்வுலகிற்கு அறிவிக்கறேன்!!!!!!!!!!

Wednesday, 29 June 2011

முதல்பார்வை

என்ன ஆச்சரியம்
உதடுகளால் மட்டுமே
பேசமுடியும் என்ற
என் எண்ணத்தை
உன் முதல்பார்வை
மாற்றிவிட்டது!!!!!!!!!!!!!

Tuesday, 28 June 2011

ஆச்சரியம்

என்ன ஆச்சரியம்
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது மட்டும்
சொற்கள் எல்லாம் என்னுள்
யுத்தம் செய்கிறது- தங்களுக்கும்
உன்னை வர்ணிக்க ஒரே ஒரு
வாய்ப்பு  தர சொல்லி!!!!!!!!!!!!!

Monday, 27 June 2011

வஞ்சகி

என் கவிதைகளை படித்து விட்டு
மௌனமாக சிரித்தாள் அப்போது
தெரியவில்லை -எனக்கு
பின்னால் இப்படி கவிதைகளாக
அழவைப்பாள் என்று!!!!!

Sunday, 26 June 2011

பிச்சை

பிச்சையாக கேட்கிறேன்- நீ
என்னை காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை
தயவு செய்து என் இதயத்தை
என்னிடம் திருப்பி கொடுத்துவிடு - பாவம்
உன்னை காதலித்ததற்காக
இவ்வுலகில் எங்காவது ஓர் மூலையில்
உயிர் வாழ்ந்துவிட்டு போகட்டும்
உன் நினைவுககளோடு !!!!!!!!!!!!!!!

Saturday, 25 June 2011

வேடிக்கை

அன்பே
எனக்கு புரியவில்லை
நாம் என்ன கண்ணாமூட்சி
ஆட்டமா ஆடுகிறோம்
நீ என்னை பார்க்காத நேரங்களில்
நான் உன்னை பார்ப்பதும்
நான் உன்னை பார்க்காத நேரங்களில்
நீ என்னை பார்ப்பதும்
ஒரே வேடிக்கை:-)

Friday, 24 June 2011

எழுத்து பிழை

உன் பெயரும் ஒரு வகையில்
எழுத்து பிழை தான் தேவதை
என அழைக்காமல் எல்லோரும்
உன்னை வேரு பெயர்
கொண்டே அழைக்கிறார்கள்!!!!

Sunday, 27 March 2011

தற்கொலை

பெண்ணே
என்னை பிடிக்கவில்லை என்று சொல்
நான் ஏற்றுக்கொள்கிறேன் அனால்
காதலைபிடிக்கவில்லை என்று
சொல்லிவிடாதே பாவம் காதல்
தற்கொலை செய்து கொள்ள போகிறது...

மருந்து

நீ வருவாய் என காத்திருந்து
ஏமாந்து போன  இதயத்திற்கு
மருந்தாகிறது உன்னோடு வாழ்ந்த
என் இறந்தகால நினைவுகள்....

எதிரி

தனிமை தான்  எதிரி
என்றிருந்தேன் இப்போது
புரிந்தது அது
உன் நினைவுகள் என்று...

பூ

பூக்களுக்கு மரணமில்லை
என்று உன்னை
பார்த்த பின்புதான்
தெரிந்து  கொண்டேன்...

வரம்

காதல் ஒரு இனிக்கும் கரும்பு
கசக்கும் வரை...
காதல் ஒரு இரவின் நிலவு
விடியும் வரை...
காதல்  ஹார்மோன்களின் ஆர்பரிப்பு
மற்றொரு அழகியை காணும் வரை...
என்னை பொருத்த வரை
காதல் கடவுளின் வரம்
கிடைத்தவர்கள் அனுபவிக்க
கிடைக்காதவர்கள் ஏங்க!!!!!

கூத்து

இளசுகளின் 
                கூத்து 
                          காதல்

Sunday, 13 March 2011

பயம்

அன்று நீயும் நானும்
கடற்கரையில் நடந்து சென்றோம்
உனக்கு தெரியாமல் உனது
பாதசுவடுகளை நான் அழித்து கொண்டே வந்தேன்
ஒருவேளை
உன் பாதசுவடுகள் பட்டு
கடற்கரை மணல்கள் உயிர் பெற்று
தங்களை காதலிக்க சொல்லி- உன்னை
தொந்தரவு செய்யும் என்பதால்

Monday, 7 March 2011

ஏக்கம்

ஒரு வார்த்தையேனும் பேசி போ - இல்லை
ஒரு மின்னல் பார்வையை வீசி போ
ஏங்காமல் ஏங்குது நெஞ்சம்
கொல்லாமல் கொல்லுது ஏக்கம்...

உன் பார்வை படும் போதெல்லாம்
தினம் தினம் துளிர்க்குது நெஞ்சம்
உன் பார்வை மறையும் போதெல்லாம்
அந்த நொடி கருகுது நெஞ்சம்....

நெஞ்சம் என்னும் கூட்டில் நீ
விதைத்து சென்ற விதைகள் யாவும்
நினைவுகளாய் முளைத்து என்னை
தினம் தினம் கொல்லுதடி.....

என்று தீரும் என்மன ஏக்கம்
காத்து கிடக்கிறேன் ஒருவேளை
உனக்கு தெரிந்தால் யரேனும்
ஒருவரிடம் செல்லி அனுப்பு - அதுவேனும்
மருந்தாகட்டும் என் ரணங்களுக்கு
உன் பார்வையால் ஏற்பட்ட ரணங்களுக்கு.............

Friday, 25 February 2011

கடிகாரம்

 ஏன்
என்னை விட என் கடிகரத்திற்கு தான்
 நீ வரும் நேரம் தெரந்திருக்கிறது போலும்
அன்று நீ வராததால் ஓட மறுக்கிறது!!!!!!

ஏமாற்றம்

என் அலைபேசியில்
உன் அழைப்பிற்காக காத்திருந்து
ஏமாந்து போனது
நான் மட்டும்  அல்ல
என் அலைபேசியும் தான்

Tuesday, 22 February 2011

அன்று தோழியோ என்னிடம் வந்து கேட்டால்
ஏன் தனிமையில் அமார்ந்திருக்கிறாய் என்று
எப்படி அவளிடம் சொல்வேன் - நான்
உன் நினைவுகளோடு அமார்ந்திருக்கிறேன் என்று................
உன் சோகத்தை என்னிடம் நேரடியாக சொல்லியிருக்கலாம்
ஏனடி தென்றலிடம் சொல்லி தூது சொன்னாய்.........
தென்றல் என்னிடம் சொல்லாமல் ஒருவேளை
வானத்திடம் சொல்லிவிட்டதா என்ன?
இப்படி விடாமல் அழுகிறது வானம்
மழையாய் !!!!!!!!!!
 

கற்றது

தொலைபோசி எனக்கு
தொல்லைபோசி- நீ
என்னுடன் பேசாத நிமிடங்களில்.......

உதடுகளால் மட்டுமே
பேசமுடியும் என்ற
என் எண்ணத்தை
உன் முதல் பார்வை
மாற்றிவிட்டது :-)

என் வீட்டு கடிகாரத்திற்கு கூட
நீ வரும் நேரம் தெரிந்திருக்கிறது- போலும்
நீ வராத நாட்களில்
ஓட மறுக்கிறது :-)
என் வீட்டில் தனிமையில் இருக்கும் போது
என் வீட்டில் உள்ள கடிகாரத்தை எல்லாம்
நிறுத்தி விட்டேன் ஏன் தெரியுமா?
நீ என்னோடு இல்லாத நேரங்களில்
என்னை பார்த்து பரிகாசம் செய்கிறது
.மணிதுளிகளாய்..................
என்றோ தொலைத்த உன் நினைவுகளை
இன்று இரவினில் கூட வெளிச்சம் போட்டு
தேடிக்கொண்டிருக்கிறேன் எங்கேயாவது
நம் இறந்தகால நிழலின் சுவடுகளாவது
இருக்கிறதா என்று........

மறதி

 அன்று

நான் சாலையோர பூங்கவை
கடக்கும் போது ஏனோ
பூக்கள் எலலாம் வாடியிருந்து
எனக்கு புரிந்தது நீ
இன்னும் அந்த பூங்காவை
கடக்கவி்ல்லை என்று ....
சில மணிநேரம் நானோ
பேருந்து நிலையத்தில் தனித்து
காத்துகிடந்தேன் உன் வரவிற்காக.....
எனக்கோ வினாடிகள் எல்லாம்
விடியல்களாய் கடந்தது - ஏனோ
நீ வரவிலலை அன்று..........
பிறகு நானோ வீடு திரும்பினேன்
உன்னுடன் இருந்த இறந்தகால
நினைவுகளை அசைபோட்டு்கொண்டு........
வீட்டில் நுழைந்த நான்
எதிர்பாராமல் நாட்காட்டியை பார்க்க
நினைவிற்கு வந்தது அன்று
ஞாயிற்றுகிழைமை என்று !!!!!!!!!!!!!!!!
காதலின் பிரசவம் கவிதைகள்....