Wednesday, 31 August 2011

காதல் செய்யும் மாயம்

உன்னோடு நடை பழகிய பிறகு
நான் தனியே நடக்கும் போது
என்ன அதிசயம்
எந்தன் நிழல் கூட எனக்கு பாரமாய் தெரிகிறது
எல்லாம் காதல் செய்யும் மாயம்!!!!!!!!!!

காதலித்து பார்

காதலின் நினைவுகளுடன் நீ வீதியினில்
தனியே நடக்கும் போது வானம் தூவும்
மழைத்துளிகள்  நம் மீது விழும் போது கூட
மலர்கள் நம்மீது விழுவதாய் தான் தோன்றும்
காதலித்து பார்!!!!!!!!!!!!!!

கவலை படாதே

என்னவளே
நான் உன்னுடன் இல்லையென்று
கவலை படாதே நான் உன்னோடும்
உந்தன் உயிரோடும் கலந்து
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன் 
வேண்டுமானால் உன் இதயதுடிப்பை
உற்று கேட்டுப்பார் என்ன சொல்லி துடிக்கிறதென்று
லப்டப் என்றா இல்லை என் கதலை சொல்லியா ?

Tuesday, 30 August 2011

அடம்பிடிக்கிறது

என்ன ஆச்சரியம்
காதலை எழுதும் போது மட்டும்
என் பேனா ஆனந்தமாய் கண்ணீர்விடுகிறது -ஆனால்
மற்றவைகளை பற்றி எழுதும் போது
ஏனோ கஷ்ட படுகிறது போலும்
எழுதாமல் அடம்பிடிக்கிறது
ஒரு வேளை என் பேனாவும்
உன்னை காதலி்க்க ஆரம்பித்து விட்டதோ !!!!!!!!!!!

Monday, 29 August 2011

உறுத்துகிறது

முள்ளின் மேல் கைகள் பட்டும் வலிக்கவில்லை
கால்கள் இரண்டும் கல்லில் பட்டும் வலிக்கவில்லை
கண்கள் இரண்டில் துசி விழுந்தும் உறுத்தவில்லை
ஆனால் வலிக்கிறது உறுத்துகிறது
என்னவள் முத்தத்தை எனக்கு தராமல்
அவள் பக்கத்து வீட்டு குழந்தைக்கு
கொடுக்கும் போது மட்டும்!!!!!!!!!!!

Sunday, 28 August 2011

பயமாம்

என்னவள் என்னிடம் சொன்னாள்
 நான் கவிதை எழுதுவதை தவிர்க்க சொன்னாள்
ஏன் என்றேன்
அவளோ சிரித்து கொண்டே இப்போதெல்லாம்
என்னை விரும்புவதை காட்டிலும்
என் கவிதைகளை அதிகம் விரும்புகிறாளாம் 
எங்கே என்னை மறந்து
என் கவிதைகளைமட்டுமே காதலிக்க 
ஆரம்பித்து விடுவோமா என்ற பயமாம்!!!!!!!!!!!

Saturday, 27 August 2011

பஞ்சு மிட்டாய்

என்ன ஆச்சரியம்
காதல் ஒரு சுகமான உணர்வு
உன்னை காதலித்த பிறகு 
தினம் தினம் என் வீட்டு வழியே
விற்று செல்லும் பஞ்சு மிட்டாயை
பார்த்தால் கூட
அவள் முகம் தான் ஞாபகம் வருகிறது

Wednesday, 24 August 2011

விடுதலை

இன்று என் கற்பனைகளுக்கு
விடுமுறை வேண்டுமாம் கெஞ்சுகிறது
என்னிடம் எதற்கு என்றேன்
அவைகளும் ஒருநாளாவது என்னவளிடம்
என்னிடம் படும் அவஸ்த்தையை சொல்லி
தயவு செய்து என்னை காதலிக்க
சொல்லி முறையிடவாம்
பாவம் அவைகளுக்கு தெரியவில்லை போலும்
நீ என்னை காதலித்தால் மட்டும்
விடுதலை கிடைத்து விடுமா என்னிடமிருந்து!!!!!!!!!!!!!!!

அவள்

அவள்
என் வாழ்வில்
நேற்றைய கனவு
இன்றைய நிழல்
நாளைய நிஜம்!!!!!!!!!!!!!!!

பார்க்க தேவையில்லை

நான் இதுவரை தேவதைகளை பற்றி
பிறர் சொல்ல கேட்டிருக்கிறேன்
ஆனால் பார்த்ததில்லை
இனியும் பார்க்க தேவையில்லை
என்னவளை பார்த்த பிறகு!!!!!!!!

Tuesday, 23 August 2011

புரிகிறதென்று

இரவு பகல் பாராமல்
கவிதையை இல்லை இல்லை
காதலை எழுதுகிறேன்
பொருத்திருந்து பார்க்கிறேன்
எப்போது தான்
என் காதல்
அவளுக்கு புரிகிறதென்று !!!!!!!!!!!!

விசித்திரமானது

நான் ஜாதி மாற்றியும்
காதலிக்கவில்லை
நான் மதத்தை மாற்றியும்
காதலிக்கவில்லை இருந்தாலும்
என் காதலை மறுக்கிறாள் 
காதலர்களே பாருங்கள்
காதல் எவ்வளவு விசித்திரமானது என்று !!!!!!!!!!!!

Monday, 22 August 2011

உண்மையாகவா

நான்
என் காதலியிடம்
அதிகம் பேசுவதில்லையாம் 
உண்மையாகவா என்றேன்
அவளோ சிரித்து கொண்டே
 உன்னை விட  என் கவிதை
அதிகம் பேசுகிறதாம்
அவள் மீது
நான் கொண்ட காதலை!!!!!!!!!!!!

பைத்தியம்

என் காதலை சொன்னால்
என்னை பைத்தியகாரன் என்கிறாள்
எப்படி அவளுக்கு புரியவைப்பேன்
என் பைத்தியம் அவள் மீதென்று.....

இரசிக்கிறது.

என்னவள்
என் கவிதைகளை
 இரசிக்கிள்
என்ன ஆச்சரியம் இங்கு
ஒரு கவிதை
இன்னொரு கவிதையை  இரசிக்கிறது!!!!!!!!!

Saturday, 20 August 2011

தோல்வி

இன்றும்
அவள் அழகோடு
போட்டிபோட்டு தோற்று போனது
என் எதிர் வீட்டு ரோஜா
பாவம் அவள் கடந்து சென்றதும்
தன் இதழ்களை உதிர்த்து
தோல்வியை ஒப்பு கொண்டது....

Sunday, 14 August 2011

குறை

என்னவள் என்னிடம் வந்து
குறை கூறுகிறாள்
அவள் வீட்டு கண்ணாடி
அவளை சரியாக பிரதிபளிக்கவில்லையாம்
ஒருவேளை அவள் வீட்டு
கண்ணாடி கூட அவளை பார்த்து
வெட்கப்படுகிறது போலும்!!!!!!!!!!!

Sunday, 7 August 2011

உதட்டு சாயம்

உன்னை யாரடி
உதட்டு சாயத்தையெல்லாம் வானிற்கு
கடனாய் கொடுக்க சொன்னது
மாலை நேரத்தில் வானத்தை பார்
உலகமே வியக்கும் அளவிற்கு
பூசிக்கொண்டு என்னை பார்த்து
ஏளனம் செய்கிறது
தினம் தினம் !!!!!!!!!!!!!!!