Thursday, 30 June 2011

அறிவிப்பு

ஒற்றை சொல்லாவது சொல்லடி
என்னை காதலிக்கவில்லை என்று
அப்படியாவது காதல் என்ற சொர்க்கம்
உன் உதடுகளின் வழியே பிறந்ததாக
இவ்வுலகிற்கு அறிவிக்கறேன்!!!!!!!!!!

Wednesday, 29 June 2011

முதல்பார்வை

என்ன ஆச்சரியம்
உதடுகளால் மட்டுமே
பேசமுடியும் என்ற
என் எண்ணத்தை
உன் முதல்பார்வை
மாற்றிவிட்டது!!!!!!!!!!!!!

Tuesday, 28 June 2011

ஆச்சரியம்

என்ன ஆச்சரியம்
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது மட்டும்
சொற்கள் எல்லாம் என்னுள்
யுத்தம் செய்கிறது- தங்களுக்கும்
உன்னை வர்ணிக்க ஒரே ஒரு
வாய்ப்பு  தர சொல்லி!!!!!!!!!!!!!

Monday, 27 June 2011

வஞ்சகி

என் கவிதைகளை படித்து விட்டு
மௌனமாக சிரித்தாள் அப்போது
தெரியவில்லை -எனக்கு
பின்னால் இப்படி கவிதைகளாக
அழவைப்பாள் என்று!!!!!

Sunday, 26 June 2011

பிச்சை

பிச்சையாக கேட்கிறேன்- நீ
என்னை காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை
தயவு செய்து என் இதயத்தை
என்னிடம் திருப்பி கொடுத்துவிடு - பாவம்
உன்னை காதலித்ததற்காக
இவ்வுலகில் எங்காவது ஓர் மூலையில்
உயிர் வாழ்ந்துவிட்டு போகட்டும்
உன் நினைவுககளோடு !!!!!!!!!!!!!!!

Saturday, 25 June 2011

வேடிக்கை

அன்பே
எனக்கு புரியவில்லை
நாம் என்ன கண்ணாமூட்சி
ஆட்டமா ஆடுகிறோம்
நீ என்னை பார்க்காத நேரங்களில்
நான் உன்னை பார்ப்பதும்
நான் உன்னை பார்க்காத நேரங்களில்
நீ என்னை பார்ப்பதும்
ஒரே வேடிக்கை:-)

Friday, 24 June 2011

எழுத்து பிழை

உன் பெயரும் ஒரு வகையில்
எழுத்து பிழை தான் தேவதை
என அழைக்காமல் எல்லோரும்
உன்னை வேரு பெயர்
கொண்டே அழைக்கிறார்கள்!!!!