Sunday, 27 March 2011

தற்கொலை

பெண்ணே
என்னை பிடிக்கவில்லை என்று சொல்
நான் ஏற்றுக்கொள்கிறேன் அனால்
காதலைபிடிக்கவில்லை என்று
சொல்லிவிடாதே பாவம் காதல்
தற்கொலை செய்து கொள்ள போகிறது...

மருந்து

நீ வருவாய் என காத்திருந்து
ஏமாந்து போன  இதயத்திற்கு
மருந்தாகிறது உன்னோடு வாழ்ந்த
என் இறந்தகால நினைவுகள்....

எதிரி

தனிமை தான்  எதிரி
என்றிருந்தேன் இப்போது
புரிந்தது அது
உன் நினைவுகள் என்று...

பூ

பூக்களுக்கு மரணமில்லை
என்று உன்னை
பார்த்த பின்புதான்
தெரிந்து  கொண்டேன்...

வரம்

காதல் ஒரு இனிக்கும் கரும்பு
கசக்கும் வரை...
காதல் ஒரு இரவின் நிலவு
விடியும் வரை...
காதல்  ஹார்மோன்களின் ஆர்பரிப்பு
மற்றொரு அழகியை காணும் வரை...
என்னை பொருத்த வரை
காதல் கடவுளின் வரம்
கிடைத்தவர்கள் அனுபவிக்க
கிடைக்காதவர்கள் ஏங்க!!!!!

கூத்து

இளசுகளின் 
                கூத்து 
                          காதல்

Sunday, 13 March 2011

பயம்

அன்று நீயும் நானும்
கடற்கரையில் நடந்து சென்றோம்
உனக்கு தெரியாமல் உனது
பாதசுவடுகளை நான் அழித்து கொண்டே வந்தேன்
ஒருவேளை
உன் பாதசுவடுகள் பட்டு
கடற்கரை மணல்கள் உயிர் பெற்று
தங்களை காதலிக்க சொல்லி- உன்னை
தொந்தரவு செய்யும் என்பதால்

Monday, 7 March 2011

ஏக்கம்

ஒரு வார்த்தையேனும் பேசி போ - இல்லை
ஒரு மின்னல் பார்வையை வீசி போ
ஏங்காமல் ஏங்குது நெஞ்சம்
கொல்லாமல் கொல்லுது ஏக்கம்...

உன் பார்வை படும் போதெல்லாம்
தினம் தினம் துளிர்க்குது நெஞ்சம்
உன் பார்வை மறையும் போதெல்லாம்
அந்த நொடி கருகுது நெஞ்சம்....

நெஞ்சம் என்னும் கூட்டில் நீ
விதைத்து சென்ற விதைகள் யாவும்
நினைவுகளாய் முளைத்து என்னை
தினம் தினம் கொல்லுதடி.....

என்று தீரும் என்மன ஏக்கம்
காத்து கிடக்கிறேன் ஒருவேளை
உனக்கு தெரிந்தால் யரேனும்
ஒருவரிடம் செல்லி அனுப்பு - அதுவேனும்
மருந்தாகட்டும் என் ரணங்களுக்கு
உன் பார்வையால் ஏற்பட்ட ரணங்களுக்கு.............